Posted: Sat Nov 10, 2012 12:12 pm Post subject: MSV - Playing with tones and semitones - Part 1
MSV அவர்கள் பாடலின் வரிகளிலேயே இசை அடங்கி உள்ளது. அதைத்தான் நான் வெளி கொணர்ந்தேன் என்று அடிக்கடி கூறுவார்.
ஒரு பாடலில் இசை என்பது காபியின் சக்கரை போல இருக்க வேண்டும். சக்கரை தெரிந்தால் காபி இனிக்காது. சக்கரை தெரியாமல் கலந்தால்தான் காபி இனிக்கும். அது போல தான் MSV இன் இசையும்.
இந்த பதிவினில் அவர் சில வார்த்தைகளை எப்படி கையாளுகிறார் என்று பார்க்கலாம்.
மயக்கம் என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம்.
பாக்ய லக்ஷ்மி படத்தில் வெறும் மாலை பொழுதின் பாடலில் வரும் வார்த்தைகளை கவனித்தால்
மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற இடத்தில வரும் மயக்கம் என்று வார்த்தையை எப்படி இசையில் கையாளுகிறார் பாருங்கள். அந்த பாடல் சந்திர கௌன்ஸ் ராகத்தில் அமைந்தது என்று கூறுவார்கள்.
சந்திர கௌன்ஸ் ராகத்தின் ஆரோஹனம்
ச க1 ம1 த1 நி1 ச
அவரோஹனம்
ச நி2 ச நி1 த1 ம1 க1 ச
அவரோகனதில் காகலி நிஷாதம் கலந்து வரும் ராகம்.
அந்த காகலி நிஷந்தம் நி2 வை மயக்கம் என்ற வார்த்தையில் கொண்டு வருவார்.
காகலி நிஷாதம் மேல் சட்ஜ்ஹமத்திற்கு 1 ஸ்வரம் குறைந்தது. பொதுவாகவே மயக்கம் என்ற சொல் தளர்ச்சியை குறிக்கும். எனவே இசையும் 1 ஸ்வரம் குறைந்து ஒலிப்பது எவ்வாறு வார்த்தைக்கு இசைந்து ஒலிக்கிறது என்பது புரியும்.
மேலும் இந்த பாடல் சந்திர கௌன்ஸ் ராகத்தில் அமைந்தாலும் சில இடங்களில் பஞ்சமமும் சதுர்ஷ்ட ரிஷபமும் ரி2 பேசும். குறிப்பாக வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி என்ற இடத்தில மேற்கூறிய ஸ்வரங்கள் பேசும்.
அந்த இடத்தில சந்திர கௌன்ஸ் ராகமே தன வழியை மறந்தது போலும்.
இது ஒரு சோக மயக்கம். அதே படத்தில் வரும் ஒரு இன்ப மயக்கம் பற்றியும் காண வேண்டும். அது அடுத்த பதிவில்.....
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum