Posted: Fri Mar 01, 2013 11:39 am Post subject: The Factors that inspires MSV - 5
இசை கருவிகளை பயன்படுத்தும் விதம் பற்றி
MSV அவர்கள் ஒரு பாடலுக்கான இசை கருவிகளை உபயோகபடுத்துவது பற்றி நிறைய பதிவு செய்திருக்கிறோம்.
கண்ணன் என்ற வார்த்தை வந்தாலே புல்லாங்குழலை அவர் உபயோகதிருப்பதை அறிவோம்.
ஆனால் அந்த இசை கருவிகளை அவர் பயன்படுத்தும் விதம் நம்மை அசப்பில் ஆழ்த்துகிறது.
உதாரணதிற்கு சில பாடல்களை காணலாம்.
'வீணை பேசும்' என்ற பாடலில் முதலில் வீணையை கொண்டு ஆரம்பித்து பின் பாடகர் பல்லவி பாடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் போல் (counter melody) அமைத்த விதம் அதி அற்புதம்.
'வாழ்ந்து பார்க்க வேண்டும்' பாடலில் நண்பர்கள் குழுவாக கார் இல் பயணம் செய்யும் பொழுது அந்த கார் horn போன்ற ஒலியை brass section (Trumpet,Sax Tramphone etc) வாத்திய கருவிகளை உபயோகிததையும் கூர்ந்து கவனித்தால் இந்த காரணத்திற்க்காக தான் அந்த இசை கருவியையே அவர் பயன்படுத்தினார் என்று சொல்லலாம்.
மேலும்
'சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு' என்ற வார்த்தை வந்தவுடன் பாடலை ஆரம்பிக்கும் விதமே தாள கருவிகளை ஒரு உளி கொண்டு கல்லை அடித்தால் என்ன ஒலி வருமோ அது போலவே அமைந்திருப்பதையும் காணலாம். மேலும் இந்த பாடலில் ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தை வரும்போது அந்த தாள அமைப்பு இருப்பது MSV conscious ஆக இதை செய்தார் என்ற முடிவுக்கு வரலாம். எனினும் இந்த பதிவின் தீர்மானத்தை படிப்பவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum