|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram
Joined: 23 Oct 2006 Posts: 782
|
Posted: Wed May 23, 2007 11:46 am Post subject: Vazhthu KavithaigaL on MSV by Salem Ganesh |
|
|
"மெல்லிசை மாமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் மீது, MSVTimes.com முக்கியக் குழுவின் ஒருவரான சேலம் கணேஷ் எழுதிய வாழ்த்துக் கவிதைகள். முதல் கவிதையை அவர் இணையதள திறப்பு விழாவின் போது மேடையில் படித்துக் காண்பிக்க, மேடையில் இருந்த "மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர் சோ அவர்கள் உட்பட, விழாவிற்கு வந்திருந்த அனைவரிடமிருந்தும் இக்கவிதை பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக் கவிதை - 1
இந்த நாள் இனிய நாள்
இது என் வாழ்வில் சிறந்த நாள்
நம் நாட்டில் பிறந்ததால் பலருக்கு பெருமை
நீ இங்கு பிறந்ததால் நம் நாட்டிற்கு பெருமை
அனைவரையும் மதிப்பது உந்தன் குணம்
என்றும் உன்னை துதிப்பது எந்தன் மனம்
ரசிகர்களை கவர்திழுப்பதில் நீ காந்தமே
உந்தன் குணம் என்றும் சாந்தமே
உங்கள் இருப்பிடம் கூட சாந்தோமே
M.S.V என்பது மூன்றெழுத்து
கணேஷ் என்பது மூன்றெழுத்து
நான் உங்கள் மேல் கொண்ட பக்தி என்பதும் மூன்றெழுத்து
நான் உங்கள் வைத்துள்ள பாசம் என்பதும் மூன்றெழுத்து
பாடல் என்ற மூன்றெழுத்துக்கு
இளமை என்ற மூன்றெழுத்தையும்
இனிமை என்ற மூன்றெழுத்தையும்
மெட்டு என்ற மூன்றெழுத்தின் மூலம் தருபவரே
என் உயிர் என்ற மூன்றெழுத்து
உங்கள் உடைமை என்பதும் மூன்றெழுத்து
எனது மூச்சு என்ற மூன்றெழுத்து உள்ளவரை
உனது புகழ் என்ற மூன்றெழுத்தே
எனது பேச்சு என்ற மூன்றெழுத்தாகும்
அடுத்த பிறவி என்ற மூன்றெழுத்து இருந்தால்
உங்கள் மகன் என்ற மூன்றெழுத்தாக பிறக்க ஆசை
என் அன்னை என்ற மூன்றெழுத்தையும்
என் தந்தை என்ற மூன்றெழுத்தையும்
என் M.S.V என்ற மூன்றெழுத்தில் காண்கிறேன்
என் கனவு என்ற மூன்றெழுத்தில் கூட
உன் நினைவு என்ற மூன்றெழுத்தை சுமக்கும்
சேலம் என்ற மூன்றெழுத்தில் வாழும்
கணேஷ் என்ற மூன்றெழுத்து
வாழ்க என்ற மூன்றெழுத்தால் உங்களை வாழ்த்துகிறேன்.
"சேலம்" கணேஷ்
M S V தாசன் _________________ Ramkumar |
|
Back to top |
|
|
Ram
Joined: 23 Oct 2006 Posts: 782
|
Posted: Wed May 23, 2007 12:05 pm Post subject: Vazhthu Kavithai - 2 |
|
|
வாழ்த்துக் கவிதை - 2
மெல்லிசை மன்னரே!
உம்மை ஈன்றவள் இசை தாய்
அவள் மனங்குளிர நீ இசைத்தாய்
இசை என்றால் புகழ் என்றும் பொருள்
அந்நீங்காப் புகழ் உனக்கு கிட்டியது கடவுளின் அருள்
அன்று இனிய இசையால் மக்களை மயக்கினான் கண்ணன்
அவனின் மறு அவதாரமே எங்கள் மெல்லிசை மன்னன்
என் தம்பி என்று பாசம் கொண்டு அழைக்கும் அன்புக்கோர் அண்ணனே
நினைத்தாலே இனிக்கும் சுகமான ராகங்களை இசைக்கும் எங்கள் தங்கமே
அபூர்வ ராகங்களை அள்ளி தரும் கர்ணனே
கலைக்கோயிலின் ஒளி விளக்கே
நம் நாடு பெற்ற இசை புதையலே
தெய்வத்தாய் ஈன்றெடுத்த தெய்வமகனே
அன்பே ஆருயிரே! பாசமலரே!
நிலவே மலரே! கண்ணே கனியமுதே!
எத்தனை ராஜாக்கள் வந்தாலும் நீ மட்டும் எங்க ஊர் ராஜா
நான் ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும் அண்ணா நீ என் தெய்வம்
என் நெஞ்சிருக்கும் வரை என் இதயத்தில் நீ இருப்பாய்
நீ பேரும் புகழும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க
என வாழ்த்தி வணங்குகிறேன்!
'சேலம்' கணேஷ்
M S V தாசன் _________________ Ramkumar |
|
Back to top |
|
|
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Thu May 24, 2007 8:57 am Post subject: |
|
|
அன்புள்ள கணேஷ்,
எம் எஸ் வி மீது நீங்கள் எழுதிய கவிதை நெஞ்சை நெகிழ்வித்தது.
நம் இணையதளத் தொடக்க விழாவில் நீங்கள் படிக்கக் கேட்டேனென்றாலும், அதை இங்கே படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது.
தொடர்க இப்பணியை !
உங்களுக்குப் மிக பிடித்த பாடல்கள் ப்ற்றி ஒவ்வொன்றாகக் கவிதையிலேயே அலசுமாறு கேட்டுக்கொள்கிறேன். அது உங்களால்தான் முடியும் !
அன்புடன் ராம்கி. _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|