|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Vatsan
Joined: 20 Jan 2007 Posts: 352
|
Posted: Wed Dec 19, 2007 1:02 pm Post subject: Remix |
|
|
Hi All,
Frankly I do not care as long as MSV's name figures in the acknowledgement list and a sizeable royalty is passed onto him. Some figure could be worked out based on the frequency of telecast/ broadcast of the song(s). Another stipulate could be, every CD carrying the re-mixed song should include the original as well. |
|
Back to top |
|
|
Sriram Kannan
Joined: 12 Sep 2007 Posts: 103
|
Posted: Wed Dec 26, 2007 12:18 pm Post subject: |
|
|
REMIX PEST STRIKES AGAIN!!!!
This time it is the eternal "Poo Mazhai Thoovi" from "Ninaithadhai Mudipavan" for a Satyaraj Movie.
These people does not have the brains to compose a 6-minute song (not even a three-charanam song), but are ready to re-mix one... Shameless!!!
If Satyaraj is a true MGR fan, let him use the original song for the movie. Why to spoil the music of a legend and get a bad name to both the actor and the MD? _________________ Thanks and Regards,
Sriram Kannan.
Follow me at http://bibliomaniac-moviefanatic.blogspot.com/ |
|
Back to top |
|
|
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Wed Dec 26, 2007 1:59 pm Post subject: |
|
|
[size=18]அன்பார்ந்த இன்றைய தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களே, பாடல் ஆசிரியர்களே, இசையமைப்பாளர்களே, இயக்குநர்களே !
மெல்லிசைமன்னர் எம் எஸ் வி யின் "எம்.எஸ்.வி டைம்ஸ்.காம்" நண்பர்கள், மற்றும் ரசிகர்கள் சார்பாக வணக்கங்கள் !
தற்போது சர்வசாதாரணமாக் நடந்துவரும், பெருகிவரும் ' ரீமிக்ஸ்'
என்ற பெயரில் பழைய (ஆனால் இன்னும் இளமையான) பாடல்கள் சிதைக்கப்படும் வைபவம் எம் எஸ் வி ரசிகர்களான எங்களைப் பெரிதும் புண்படுத்துகிறது ! இத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள ரசிகர்களின் மனக்குமுறல்களைத் தயவுசெய்து படிககவும்.
அன்றைய இசையமைப்பாளர்கள் கற்பனை வளத்தில் உதித்த பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்றே கூறவேண்டும்.
காப்பிரைட், ராயல்டி என்பதெல்லாம் அறியப்படாத காலத்தில் உருவான உணர்வை வருடும் பாடல்களை, JUST LIKE THAT, எடுத்து சிதைப்பது நியாயமா, தர்மமா ?
எம் எஸ் வி போன்ற இசைமஹான்களின் அமைதியை, அனுமதியாக நினைத்து, அவர் பாடல்களை அவர் கண்முன்னே (காதுகள் முன்னே !) கதற அடிப்பது அடுக்குமா ?
அப்பாடல்களை நீங்கள் எடுக்கக்காரணம், அவற்றின் இனிமை, இதம், இளமை, அமரத்துவம். அவற்றைத்தொடும் ஆசையை நிச்சயமாக தவிர்க்கவே முடியாது - அப்படி உருவாக்கப்பட்டவை அவை.
தாராளமாக் எடுத்துக்கொள்ளுங்கள் ...
ஆனால்......
அவற்றை அப்படியே உபயோகப்படுத்துங்கள்.
அதற்கு உரிய் சன்மானத்தை அதை உருவாக்கியவரிடம் மனமாரக் கொடுத்து, அவர் பூர்ண ஆசிகளுடன் படத்தில் உரிய் இடத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
தவறாது உருவாக்கிய்வ்ரின் பெயரை டைட்டிலில் போட்டு அவருக்குப் பெருமை சேருங்கள்.
நீங்களும் அதில் பெருமை கொள்ளுங்கள் - அந்தப்பொக்கிஷங்கள் மேலும் உங்களால் பாதுகாப்பப்படுவதற்காக !!
அந்தப்பாடல்களுக்காகவே உங்கள் படங்கள் வெற்றிவாகை சூடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ! இது உங்களுக்கே நன்கு தெரியும்.
எங்கள் இந்த உள்ளக்குமுறலை உணர்ந்து இனிமேலாவது செயல்ப்டுவீர்களா ? மெல்லிசை மன்னர் போன்ற இசைவல்லுநர்களை
மனமகிழச்செய்வீர்களா ?
மீண்டும் வணக்கங்கள் !!
எங்கள் எண்ணம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்,
ராம்கி.[/size] _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
raghavankannan
Joined: 05 Jan 2007 Posts: 57
|
Posted: Sun Dec 30, 2007 2:25 pm Post subject: |
|
|
தேவி மற்றும் தினமணி நாளிதழில் கிடைத்த தொகுப்பை இங்கே அளிக்கின்றேன்.
இசை அமைப்பாளர்களிடம் ஒரிஜனல் சரக்கு இல்லை:
"மெல்லிசை மன்னர்கள் கடித்து துப்பிய எச்சிலைத்தான் இன்றைய இசை அமைப்பாளர்கள் பயன் படுத்துகிறார்கள்"
"இது ரொம்பவும் சூடாக இருப்பதாக" நினைக்கிறீர்கள்?"
"இல்லை, இல்லை உண்மைதான்! தப்பே இல்லை என்கிறீர்களா?"
நீங்கள் எப்படி நினைத்தாலும் சர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இந்த கருத்துக்கு இசைஞானியின் ஏரியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது!
எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இவர்களிருவரும் கடித்துத் துப்பிய எச்சிலைத்தான் இன்றைய இசை அமைப்பாளர்கள் எடுத்தாள்கிறார்கள். மெல்லிசை மன்னர்களின் சாயல் இல்லாமல் யாரும் இசை அமைக்க முடிவதில்லை. என்னை அறிமுகப்படுத்திய குரு அவர்கள் தான். இன்றைக்கும் அவர் என்னை "பாலு அவர்களே" என்று மரியாதையாக கூப்பிடுவார். அவரது இசையில் வார்த்தைகளுக்கு உயிர் இருக்கும் என்பதுதான் எஸ்.பி.பியின் கருத்து.
படத்துக்கு படம் இப்போது "ரீ மிக்ஸ்" என கொலையாவது மெல்லிசை மன்னர்களது மெட்டும் இசைஞானியின் மெட்டும்தான்.இது கூட எஸ்.பி.பியின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்! அடுத்தவரது கற்பனையை சிதைப்பது கூட ஒரு வகையான "சேடிஸ்ட்" குணம்தானே.
இ(ம்)சை அமைப்பாளர்கள்:
பிரகாஷ் ராஜின் டூயட் மியூசிக்ஸ் நிறுவடம் மூலம் "வெள்ளித்திரை" படத்தின் பாடல் சி.டி.க்கள் வெளியிடப்பட்டன. மோகன்லால் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட இந்த விழாவில் எம்.எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் கெளரவிக்கப்பட்டர்கள். விழாவில் பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியன்...எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி ஆகியோர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர்கள். இவர்களுடைய தாக்கம் இல்லாமல் பாடல்கள் வெளிவருவதில்லை. அந்தக் காலத்தில் ஒரே டிராக்கில் அ
ற்புதமான பாடல்களைக் கொடுத்தார்கள். இப்போது 200 டிராக் இருந்தாலும் அவர்களது தரத்தை கொடுக்க முடியவில்லை. இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள், பாடகர்களிடம் வேலை வாங்குகிறேன் என்று கூறி பல முறை ரீ டேக் எடுக்கிறார்கள். டூயட் பாடலி கூட தனியாக உணர்ச்சியே இல்லாமல் பாட வேண்டியுள்ளது. உடன் பாடுவது யார் என்று கேட்டால் 'இன்னும் முடிவு செய்யவில்லை. உங்கள் டிராக்கை மட்டும் பாடுங்கள்' என்கிறார்கள். இசை நன்கு தெரிந்தவர்களிடமும், இசையே தெரியாதவர்களிடமும் கூட பணியாற்றலாம். ஆனால் அரைகுறை இசை அறிவோடு இம்சை செய்பவர்களை நினைத்தால் சிரமமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்" என்று இசை அமைப்பாளர்கள் என்ற பெயரில் உலவிக் கொண்டிருப்பவர்கள் மீது சாட்டையச் சுழற்றினார். |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|