|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Meenakshi
Joined: 23 Dec 2007 Posts: 119 Location: United States Of America
|
Posted: Tue May 06, 2008 1:10 am Post subject: Lyrics - Enna uravo, enna pirivo - Kalangarai villakkam |
|
|
படம்: கலங்கரை விளக்கம் பாடியவர்: டி.எம்.எஸ்.
இசை: மெல்லிசை மன்னர்
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
யாரை சொல்லி என்ன லாபம் கானல் நீரை தேடினேன்
தாகம் தீர மோகம் தீர பாலைவனத்தில் ஓடினேன்
பாலைவனத்தில் ஓடினேன்
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
நேற்று சிரித்த சிரிப்பு எங்கே நிலவு முகத்தை கேட்கிறேன்
நீயும் நானும் பாடிய பாட்டை பாடி பாடி
பாடி பாடி பார்க்கிறேன்
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
கண்ணை நம்பி பெண்ணை நம்பி வாழ்ந்த வாழ்க்கை போதுமே
பாதை மாற பயணம் போக கேட்டுக்கொண்டேன் பாடமே
கேட்டுக்கொண்டேன் பாடமே
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
கலங்கரை விளக்கம் படத்தில் வரும் இந்த அருமையான பாடலின் இசையும், டி.எம்.எஸ்ஸின் குரலும் மனதையே கரையச் செய்யும் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த பாடலை இவ்வளவு அற்புதமாக வேறு யாராலும் பாட முடியாது என்று நிரூபித்தவர் டி.எம்.எஸ். என்றால் அவரை இவ்வளவு அழகாக பாட வைத்து, இந்த பாடலுக்கு இவ்வளவு அருமையான மெட்டமைக்க வேறு யாரால் முடியும் என்று நிரூபித்தவர் மெல்லிசை மன்னர்.
மெல்லிசை மன்னர் Bongos வாத்தியத்தை பல பாடல்களில் மிக அழகாக உபயோகித்து இருக்கிறார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது இந்த பாடல். இந்த பாட்டில் அவர் இந்த வாத்தியத்தை இசைத்திருப்பது, இவ்வளவு அழகா என்று எண்ணி, எண்ணி வியக்கத் தோன்றுகிறது. என்ன உறவோ, என்ன பிரிவோ ஒஹோஹோ என்று பாடல் துவங்கும்போது கூடவே பின்ணணியில் வரும் அந்த bongos, பின்பு, ஒவ்வொரு முறையும் சரணத்தையும், பல்லவியையும் மிக அழகாக இணைத்து, இனிமை சேர்த்து உள்ளது.
அடுத்து இந்த பாடலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று புல்லாங்குழல். ஒவ்வொரு சரணத்திலும் முதல் இரண்டு வரிகளை இரண்டு முறை பாடிய பின்பு, மூன்றாவது வரியை பாடத்துவங்கும் முன்பு வரும் அந்த சிறிய புல்லாங்குழல் ராகம், நம் நெஞ்சை வருடும். மேலும், முதல் சரணம் தொடங்குவதற்கு முன்பு வரும் அந்த புல்லாங்குழல், இரண்டாவது சரணம் தொடங்கும் முன்பு வரும் அந்த bongos, மூன்றாவது சரணம் தொடங்கும் முன்பு வரும் அந்த ட்ரும்ஸ், இவை எல்லாம் இந்த பாடலில் மிகவும் பிரமாதமான விஷயங்கள். மெல்லிசை மன்னர் எவ்வளவு அழகாக இந்த வாத்தியங்களை எல்லாம் இந்த பாடலில் இசைத்திருக்கிறார். அருமை, அருமை!!!! இந்த வார்த்தையை விட, இந்த பாடலை கேட்கும்போது மனம் இந்த பாடலோடு கரையுமே, அந்த உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை.
பாடலின் வரிகளோ மிகவும் அற்புதம்.
'தாகம் தீர, மோகம் தீர, பாலை வனத்தில் ஓடினேன்'
'பாதை மாற, பயணம் போக கேட்டுக்கொண்டேன் பாடமே'
பாடலின் ஒவ்வொரு வரிகளும் சோகத்தை சொல்லும், கண்ணீர் சிந்த வைக்கும்.
டி.எம்.எஸ். இந்த பாடலின் மெட்டையும், வரிகளையும் நன்கு உணர்த்து, அனுபவித்து பாடி இருக்கிறார். ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் உச்சரித்து இருப்பது அழகோ அழகு. பாடலின் இடையே அவரது சிரிப்பு, கடைசி சரணத்தில், வரும் அந்த வரிகள் 'கண்ணை நம்பி, பெண்ணை நம்பி வாழ்ந்த வாழ்கை போதுமே' இதில் 'போதுமே' என்று அவர் உச்சரித்திருப்பது, வேறு ஒருவரால் அப்படி உச்சரிக்க முடியுமா என்று நினைத்துகூட பார்க்க முடியாது. அவ்வளவு சிறப்பாக இந்த பாடலை பாடி உள்ளார்.
சோகமும் ஒரு சுகம் என்று சொல்வார்கள். இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் இதை உணர முடியும். |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|