|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Meenakshi
Joined: 23 Dec 2007 Posts: 119 Location: United States Of America
|
Posted: Sun Aug 16, 2009 9:49 am Post subject: Lyrics - Raja Raja Shri Rajan Vandhaan - Ooti varai uravu |
|
|
படம்: ஊட்டி வரை உறவு
பாடியவர்கள்: பீ.பீ. ஸ்ரீநிவாஸ், எல்.ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்
PBS:
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
LR:
கண்ணொரு பாவனை கை ஒரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தர வந்தான்
PBS:
தேடி சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிகொண்டது
LR:
பின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்தது
தேனை தந்ததால் இன்ப ஞானம் வந்தது
PBS:
ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல விழுந்த தாளம் ஒன்றல்ல
PBS&LR:
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
LR:
கண்ணொரு பாவனை கை ஒரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
(ராஜ ராஜ)
LR:
மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது
PBS:
கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது
பெண்ணும் பெண்ணல்ல, இணைந்த கண்ணும் கண்ணல்ல
LR:
மலர்ந்த பூவும் பூவல்ல, அமர்ந்த வண்டும் வண்டல்ல
PBS&LR:
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
PBS:
இடையொரு வேதனை நடயொரு வேதனை கொள்ள
இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல
PBS&LR:
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் ம்ம்ம்ம்ம்ம்ம் ராணி
ராஜ போகம் தர வந்தான்
ம்ம்ம்ம்ம்ம்ம் ஓஓஓஓஒஹோஓஒ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
1967 -ல் டைரக்டர் திரு.ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம், தமிழ் திரை உலகில் மிகச் சிறந்த நகைச்சுவை படங்களின் வரிசையில் இடம் பெற்ற ஒன்று. படத்தில் இந்த பாடல் முத்துராமனும், எல். விஜயலக்ஷ்மியும் பாடுவதாக வரும்.
இது ஒரு அழகான துள்ளலுடன் கூடிய வேகமான பாடல். இந்த பாடலின் பின்னணி இசை புல்லாங்குழல், வயலின், ஆர்மோனிகா, டிரம்பெட், ட்ரும்ஸ், பாங்கோஸ், கிடார் என்று படு கலக்கல். இத்தனை வாத்தியங்கள் இருந்தாலும் இந்த பாடலின் சரணத்தில் இருந்து துவங்கும் அந்த ட்ரும்ஸ் இசையானது என்னை மிகவும் கவரும். இந்த பாடலை நான் கேட்கும் பொழுதெல்லாம் என் மனதை கொள்ளை கொண்டு விடும். என்னை மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்.
இந்த பாடல் துவங்குவது வேகமான புல்லாங்குழல் ராகத்தில்தான். பின் மென்மையான குரலில் பீ.பீ.எஸ். பல்லவியை பாடத் துவங்க, அவரை தொடரும் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் பாடல் இன்னும் துள்ளலுடன் வேகமெடுக்கும். பீ.பீ.எஸ் அவர்களின் மென்மையான குரல், எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் அதிரடி குரல் இவை இரண்டும் இரண்டு துருவங்களாக இருந்தாலும், இவர்கள் இருவரும் இணைந்து பாடியுள்ள அனைத்து பாடல்களுமே மெஹா ஹிட் பாடல்கள்தான்.
இந்த பாடலின் சரணம் மிகவும் அழகு. சரணம் துவங்கும்போதே பின்னணியில் ட்ரும்ஸ் துவங்கும். முதல் இரண்டு வரி முடிந்தவுடன் ஒரு சிறு புல்லாங்குழல் ராகம், பின் அடுத்து வரும் வரிகளில் பீ.பீ.எஸ்., எல்.ஆர் இருவரும் இணைந்து பாடும் வரிகளில் பாடலின் வேகம் சற்று குறைந்து ஒரு அழகான நிதானத்துடன் வரும் டிரம்பெட்டின் ராகமும், அதை தொடரும் அந்த வேகமான ட்ரம்ஸும் நம் மனதை கரைய செய்து விடும். பின் சட்டென்று ஒரு வேகத்துடன் சரணம் முடிந்து கொஞ்சலாக பல்லவி தொடரும். இதே போல் பாடலின் இரண்டாவது சரணம் துவங்கும் முன் வரும் அந்த இனிமையான கிடாரின் ராகமும், அதை தொடரும் டிரம்பெட்டின் ராகமும் அற்புதம். எவ்வளவு அழகாக இந்த பாடலை மெல்லிசை மன்னர் அமைத்திருக்கிறார்!!!
பாடல் வரிகளில் கவிதை கொஞ்சும்.
'தேடி சென்ற பூங்கொடி காலில் பட்டது, சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக் கொண்டது' என்று தொடங்கும் சரணத்தின் வரிகள் என்னை மிகவும் ரசிக்க வைக்கும்.
'கேட்கும் இசை விருந்தால் கால்கள் தாளமிடும்' என்ற கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப இந்த பாடலை கேட்கும்போது நம்மை அறியாமல் நம் கால்கள் தாளமிடும். |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|