|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
N Y MURALI
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Wed Feb 27, 2013 4:50 pm Post subject: The Factors that inspires MSV - 4 |
|
|
"வரவு எட்டணா.... செலவு பத்தணா !!!! "
வாழ்க்கையின் ஒரு முக்கியமான தத்துவத்தை ஒரு நகைச்சுவை உணர்வுடன் வார்த்தைகளிலும் அதன் மூலம் இசையிலும் இந்த பாடலில் செய்து காட்டிய உழைப்பு இந்த பாடல் உருவாகக் காரணமாயிருந்த அனைவருக்கும் உரியது.
அதிலும் MSV அவர்கள் பாடலின் வரிகளுக்கு ஏற்ப இசையை எப்படி கையாண்டார் என்று பார்க்கலாம்.
பாடல் வரிகளுடன் அதன் இசை ஸ்வரங்களையும் கொடுக்கிறேன்.
(வரவு) (எட்டணா)
(ச க2 ச) (ப ப பா)
(செலவு) (பத்தணா)
(ச க2 ச ) (ப ப தா)
(அதிகம்) (ரெண்டணா)
(நி2 ரி2 நி2) (த2 த2 நீ2)
(கடைசியில்) (துந்தனா) (துந்தனா) (துந்தனா)
(த2 நி2 ச த2) (சா ச சா) (நி1 நி1நீ1) (சா ச சா..)
பாடலின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் வரும் இசை ஸ்வரத்தை பாருங்கள்.
அது பா, தா, நீ, சா என்று ஏறு வரிசையில் வருவதை காணலாம். அவ்வாறு இருப்பதால் 'பா' வை விட 'தா' பெரியது. அதை விட 'நீ' பெரியது என்று கொள்ளலாம்.
இப்போது ஒவ்வொரு வரியும் அதற்கு ஏற்ப வரும் இசை ஸ்வரங்களையும் காண்போம்.
'எட்டணா' வை விட 'பத்தணா' பெரியது என்ற முறையில் 'பத்தணா ' என்று முடியும் இடத்தில வரும் ஸ்வரம் 'தா' , 'எட்டணா' என்று முடியும் இடத்தில வரும் 'பா' வை விட பெரியது என்ற முறையில் மிக பொருத்தமாக அமைந்தது.
மேலும் 'அதிகம்' ரெண்டானா என்ற இடத்தில முடியும் ஸ்வரம் 'நீ2' என்பது வரவை விட செலவு அதிகம் என்பதை குறிக்கும் விதமாக இன்னும் மேல் ஸ்வரமான 'நீ2' யில் முடிவது மிகப் பொருத்தம்.
CLIMAX ஆகா
(கடைசியில்) (துந்தனா) (துந்தனா) (துந்தனா)
(த2 நி2 ச த2) (சா ச சா) (நி1 நி1நீ1) (சா ச சா.)
என்ற இடத்தில் பாடலின் இசை (MELODY) மாறுவதை உணரலாம்.அதற்கு காரணம் முதலில் வந்த 'நீ2' க்கு பதிலாக 'நீ1' ஸ்வரம் மாற்றி இசை அமைக்கப்பட்டதே. அது எதை உணர்த்துகிறது?
வருமானத்திற்கு அதிகமாக செலவு ஆகும் போது ஒரு சம்சாரி கூட துந்தனா வை எடுத்துக்கொண்டு ஓட்டாண்டி ஆகிவிடுவான். எனவே அவன் வாழ்க்கை பாதையே மாறி விடும் என்ற உணர்வை மாறுகின்ற இசை மூலம் உணர்த்துவது தான் சிறப்பு.
மேலும் 'துந்தனா' என்ற வரி முடிந்தவுடன் துந்தனா இசை கருவியை மீட்டுவதன் மூலம் வார்த்தையின் தன்மைக்கேற்ப இசை கருவிகளையும் தேர்ந்தெடுக்கின்றார் என்பதும் புரியும்.
சரணத்திலேயும்
'நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது' என்னும் இடத்திலும் இசை ஸ்வரத்தை மாற்றுவதையும் உணர்ந்தால் பாடல் முழுவதும் MSV இன் ஆக்கிரமிப்பு இருப்பதை தெளிவாக உணரலாம்.
Youtube link
http://youtu.be/4DvC_ooYhwM
N Y Murali |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|