|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
RENGASAMY
Joined: 14 Jan 2007 Posts: 71
|
|
Back to top |
|
|
RENGASAMY
Joined: 14 Jan 2007 Posts: 71
|
|
Back to top |
|
|
gragavan
Joined: 15 May 2007 Posts: 101
|
Posted: Wed Sep 18, 2013 10:44 am Post subject: |
|
|
I was in Trichy that day. But went to Viralimalai temple. I was so happy to see the flex banners about the program.
Thanks to all the people who organized it.
regards,
GiRa |
|
Back to top |
|
|
Venugopalan Soundararajan
Joined: 12 Dec 2006 Posts: 532 Location: Mumbai
|
Posted: Fri Sep 27, 2013 5:42 pm Post subject: |
|
|
I am reproducing below a report that had appeared in the recent "கல்கி" magazine issue on the felicitation accorded to our Master at Trichy:
"இந்த மேடையில் உங்கள் முன்பாக ஓர் அதிசயம் நிகழ்த்தப்பட இருக்கிறது. கவிஞர் வைரமுத்து பாடல் எழுத, மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன் அவர்கள் இசையமைக்க, அந்தப் பாடலை MSV-யும், ஸ்ரீநிவாசும் பாடவிருக்கிறார்கள்" என்று ஒரு பீடிகையோடு திருச்சி கலைப் பேரவையின் தலைவர் திருச்சி சிவா அறிவிக்க, இனிதே நிகழ்ந்தது திரைப்பட இசையமைப்பாளர் M S விஸ்வநாதன் அவர்களுக்குப் பாராட்டு விழா.
இவ்விழா திருச்சி கலைப் பேரவை சார்பில் கருமண்டபதிலுள்ள தேசிய கல்லூரி விளையாட்டுத் திடலில் இம்மாதம் 7-ம் தேதி கோலாகலமாக நடத்தப்பட்டது. அதில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு MSV-யை வாழ்த்திப் பேசினார்கள்.
"உடுமலை நாராயண கவி முதல் என் பாடல் உட்படப் பல கவிஞர்களின் பாடல்களுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் MSV. காதலுக்கு இசையமைக்கலாம், கலவிக்கு இசையமைக்கலாம், சோதனைக்கு இசையமைக்கலாம், சாதனைக்கு இசையமைக்கலாம், வேதனைக்கும் இசையமைக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் விசும்பலுக்கு இசையமைக்க முடியுமா? முடியுமென்று நிரூபித்து காட்டினார் MSV. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் "சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே" என்ற பாடலுக்கு இசையமைத்து திரையுலகை பிரமிக்க வைத்தார் MSV. அந்தப் பாடலில் இசையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழியை முன்னுக்குக் கொண்டு வந்தவர் MSV" என்று உணர்ச்சி பூர்வமாகப் பேசினார் கவியரசு வைரமுத்து.
"முகமது பின் துக்ளக்" படத்தில் "நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை, அல்லா அல்லா" என்ற பாடலை விஸ்வநாதனை வைத்துப் பாடவைத்தவர் சோ. பிடிவாதமாக மறுத்த MSV முன்பாக 2 சீட்டில் பெயரை எழுதிப் போட்டு, குலுக்கலில் MSV பெயரே வந்தது. பாடல் ரெகார்டிங் முடிந்ததும் அந்த ரகசியத்தை வெளியிட்டார் சோ. "இரண்டு சீட்டிலுமே உங்க பெயரைத்தான் எழுதியிருந்தேன்", மலரும் நிகழ்வில் நெகிழ்ந்தார் S P முத்துராமன்.
இயக்குனர்கள் விக்ரமன், லிங்குசாமி, பாண்டியராஜ், நடிகர் பிரசன்னா, பாடகர் ஸ்ரீனிவாஸ், பழம் பெரும் பாடகர் A L ராகவன, நடிகைகள் M N ராஜம், நளினி, ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில், நகைச்சுவை கலை மன்ற செயலாளர் சிவகுருநாதன் வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் ஜெயந்தா தொகுத்து வழங்கினார்.
விழாவின் இறுதி ஏற்புரையில், மேடையிலேயே வைரமுத்து எழுதிய பாடல் வரிகளுக்கு MSV மெட்டமைத்து, பாடகர் ஸ்ரீனிவாசுடன் "சென்னைதான் தமிழ் நாட்டின் தலை நகரம், திருச்சிதான் தமிழ் நாட்டின் கலை நகரம்" என்று பாடினார். அந்தப் பாட்டின் முடிவில் "கடைசி மூச்சு உள்ளவரை இசையமைப்பேன்" என்று பாடியபோது அரங்கு அதிரும் கரவொலியுடன் விழா முடிவுற்றது.
Regards,
Venu Soundar |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|