|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
madhuraman
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Sat Aug 16, 2014 3:42 pm Post subject: What makes MSV pleasantly different? - III |
|
|
அன்பர்களே,
சாகா வரம் பெற்ற பாடல்களை நினைக்கையில், பட்டவர்ததனமாக வெளிப்படுவது அவற்றின் இசை அமைப்பும், அவை காட்சியை உயிரோட்டமிக்க களமாக கண் முன் நிறுத்துவதுமே எனில் மிகை அன்று.
இது எவ்வாறு சாத்தியமாகிறது எனில் அவை மனப்பூர்வமாக ஆக்கப்பட்டவை என்பதனால் தான். இவ்வகை ஆக்கங்கள் , அதில் விழைந்தோரின் 'ஆத்மார்த்த பங்களிப்பினை' பறைசாற்றுகின்றன.
இதில் ஆத்மார்ததம் எங்கிருந்து வரும் என்றால், கதை மற்றும் பாத்திரப்படைப்புகளை துல்லியமாக உணரும்போது மட்டுமே.
துல்லியமாக உணர்த்த வேண்டிய கடமை, இயக்குனருக்கும், உணர வேண்டிய பொறுப்பு ஏனைய கலைஞர்களுக்கும் உண்டு. இதனை செம்மையாக நிறைவேற்றியோர் வரிசையில் ஒரு சில நடிகர்களுக்கும், கவியரசருக்கும், மெல்லிசை மன்னருக்கும் என்றும் நீங்கா இடமும் புகழும் உண்டு.
இவர்களிடையே முதலிடம் பெறும் நபர் யார் என்பது மிகுந்த போராட்டத்தை உள்ளடிக்கிய ஆபத்து களம். எனவே இதனை கருப்பொருள் ஆகக்கொள்ளாமல், மெல்லிசை மன்னர் ஏற்படுத்திய தாக்கத்தை அறிய அவர்தம் நுணுக்கங்களை கவன்மாக காண விழைவதே நலன் பயக்கும்.
மெ.ம அவர்கள் எப்போதும் பாடலின் உயிர் நாடியை பிடிப்பது மட்டும் அல்ல, பாடல் நிறைவு பெறும் வரை, அந்த ஜீவ நாடி யை சிம்மாசனத்தில் இருந்து அகல விடாமல் கட்டிப்போட்டு, நம்மையும் நிரந்தர மனம் நிறை இசை அடிமைகளாக இருத்தி, ஒன்றுமறியா குழந்தையைப்போல் 'அப்படியா' என்று நாம் வாயையும் அடைத்து விடும் வித்தகர். இந்த வித்தகனின் உத்திதனை உறைக்க எத்தனிக்கும் எவருக்கும் கலை வாணியின் அருள் தடங்கல் இன்றி அமைதல் வேண்டும். அவ்வருள் பெற்று மேலும் தொடர்வோம்.
அன்புடன் ராமன் மதுரை _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|