|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
madhuraman
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Tue Oct 14, 2014 5:55 am Post subject: "thulliOdum kAlgaL ingE" |
|
|
அன்பர்களே
இசை கொண்டு சொற்களை, உயிர்ப்பிக்க இயலுமா என்று எண்ணும் சந்தேக சரஸ்வதிகளுக்கு சங்கீத சரஸ்வதியின் அமைதியான ஆனால் அழுத்தமான விளக்கம் 'துள்ளி ஓடும் கால்கள் இங்கே' பாடல் மூலம் அள்ளி வீசப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்ட ஒரு அறிய வாய்ப்பு.
ஆம் "பெரிய இடத்துப் பெண்" படம் வாயிலாக கவியரசரும், செவியாரசரும் புனைந்துள்ள இந்த சித்து விளையாட்டு, காவியரசர்களையும் நிச்சயம் அசைத்து பார்க்கும் எனில் மிகையல்ல.
ஏனென்றால் சொல்லும் இசையும் சமமாக இயங்கும் ஒரு அற்புதமான ஆடுகளம் இந்த திரை விந்தை. என்று கேட்பினும் மீண்டும் மீண்டும் கேள் என்று மனதை துன்புறுத்தும் ஊடல் பாடல்;ஆனால் ஊடலை ஒளித்து,தேடலை முன்னிறுத்தும் பாடலின் அசைவுகளும், இசையும் நாளெல்லாம் நம்மை சுற்றி ரீங்கரிக்கும் இனிமை தனை என்ன சொல்ல.
மேல் விளக்கம் விரைவில் .
நன்றி, அன்பன் ராமன் மதுரை _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
|
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
Posted: Tue Oct 14, 2014 9:25 pm Post subject: |
|
|
பேராசிரியர் சார்
மிக மிக நீண்ட ஆய்வு செய்ய வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இந்தப் பாட்டைப் பொறுத்த மட்டில் பல ஆண்டுகளாய்... கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள் ஒரு ஐயம் இருந்து கொண்டே உள்ளது. இந்தப் பாடலைப் பொறுத்த மட்டில் இது முழுக்க முழுக்க மெல்லிசை மன்னர் தனியாய்த் தான் அமைத்திருக்க வேண்டும். அன்றைய கால கட்டத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை இசையமைத்த பாடலின் ஒரு சாயல் கூட இல்லாத பாடல் இது. இந்த அளவிற்கு வித்தியாசமான தாளக்கட்டில் அமைந்த பாடல்களையெல்லாம் மெல்லிசை மன்னர் தனியாக இசையமைத்த பாடல்களில் தான் நான் கவனித்திருக்கிறேன். என்னுடையது சந்தேகம் தான்.
இதைப் பற்றிய தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். _________________ Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com |
|
Back to top |
|
|
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Wed Oct 15, 2014 7:18 am Post subject: |
|
|
என் நேற்றய பதிவு ஏனோ வரவில்லை ,ஆனாலும் மிக நாட்களுக்கு பிறகு இந்த பாடலைக் கேட்டததின் விளைவு நேற்றிலிருந்து மனத்தில் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டே இருக்கிறது
பேராசிரியர் ஊடலை பற்றி மேல் விளக்கம் கொடுக்குமுன் இது பாடல் இணைப்பு http://www.youtube.com/watch?v=n02BYmK9gHM
சுசீலாவின் தேன்மதுரக் குரல் அதன் இணையாக Tms .மெல்லிசை மன்னர்களின் ஆர்பாட்டம் இல்லாத நீரோடை போன்ற இசை , ஆனால் அதன் ஆரவாரம் இன்னும் மனத்தில் .
கவியரசுவின் வார்த்தைகள் கொடுத்த அடித்தளத்தில் ரீங்காரம் இடும் இசை
நமது அடுத்த இசை நிகழ்ச்சியில் இடம் பெற வேண்டியப்பாடல்
நன்றி பேராசியருக்கு முத்து குளித்து எடுத்தற்கு
கவியரசரின் வார்த்தைகள்
உன் அடிமை ஆன பின்பு என்ன் உடமை ஏது இங்கே மன்னர் உன் மலர் அடியில் ....... _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
parthavi
Joined: 15 Jan 2007 Posts: 705 Location: Chennai
|
Posted: Wed Oct 15, 2014 4:11 pm Post subject: |
|
|
I think this song has some resemblance to ,nilavu oru peNNaki' from Ulakam Sutrum vaalibhan,' especially the saraNams. _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|