|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Jeev
Joined: 09 Apr 2007 Posts: 130
|
|
Back to top |
|
|
tvvraghavan
Joined: 15 Dec 2006 Posts: 175
|
Posted: Mon Aug 06, 2007 7:52 pm Post subject: Link not working !! |
|
|
Dear Jeev,
Thanks for the link. But it does not work as it needs a user id and pwd to login n read the article. Can you copy and paste the same here in this forum for the benefit of all the rasikas out here.
MSV Rules !!!
Venkat |
|
Back to top |
|
|
gragavan
Joined: 15 May 2007 Posts: 101
|
Posted: Sat Sep 08, 2007 9:02 pm Post subject: |
|
|
அருமையாகச் சொல்லியிருக்கிறார் வைரமுத்து.
ஆக..புதுக்கவிதைக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர். அற்புதம்.
குமுதத்தில் பதிவு செய்ய சந்தா கட்ட வேண்டியதில்லை. இலவசப் பதிவுதான். செய்து கொள்ளலாம். |
|
Back to top |
|
|
irenehastings Guest
|
Posted: Sun Sep 09, 2007 5:28 pm Post subject: Re: Link not working !! |
|
|
tvvraghavan wrote: | Dear Jeev,
Thanks for the link. But it does not work as it needs a user id and pwd to login n read the article. Can you copy and paste the same here in this forum for the benefit of all the rasikas out here.
MSV Rules !!!
Venkat |
Dear Venkat,
thangal siththam en baakkiyam. Idho 'Copy & Paste'
From Kumudam 'KavippErarasu Vairamuthu ' bathilgal
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றி உங்கள் மதிப்பீடு?
மும்பையில் (பழைய பம்பாயில்) ஒரு மெல்லிசை நிகழ்ச்சி. மெல்லிசை மன்னரின் இசைமழையில் அரங்கம் மிதக்கிறது ஆனந்தத் தெப்பத்தில். மேடைக்கு ஒரு துண்டுத்தாள் வருகிறது. அதில் இருந்த செய்தி இதுதான். ‘ஓடம் நதியினிலே’ பாடுங்கள், எழுதியவர் யாரென்று பார்க்கிறார்கள். ‘இப்படிக்கு நௌஷாத்’ என்றிருக்கிறது. ‘அய்யோ… இது நேயர் விருப்பமல்ல. கடவுள் விருப்பம்’ என்று கும்பிடுகிறார் மெல்லிசை மன்னர்.
இப்படி இசைமேதைகளையே சுரக் கயிறுகளால் கட்டிப்போட்ட-வரல்லவா மெல்லிசை மன்னர்! எத்தனை மோதிரங்கள் பூட்டுவது அந்த வித்தக விரல்களுக்கு?
அறுபதுகளின் ஆகாயத்தையே தன் ஆர்மோனியத்துக்குள் அடைத்-துப் போட்ட அந்த ஆளுமையைச் சொல்லவா?
உணரமட்டுமே முடிந்த உணர்ச்சி-களுக்கு சப்த வடிவம் கொடுத்த சக்கரவர்த்தி என்று சொல்லவா?
தம்புராவின் சுதியிலேயே ஒரு மொத்தப் பாட்டும் அமையவேண்டும் என்று இயக்குநர் கேட்டபோது, ‘பொன்னென்பேன்… சிறு பூ வென்பேன்’ என்று பாடி முடித்த படைப்பாற்றலைச் சொல்லவா?
‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாரதி பாட்டுக்கு இசை-யமைத்தபோது, ஒரு கவிஞன் எழுத எத்தனிக்கும் முணுமுணுப்பிலிருந்து இசையமைத்தால் என்ன என்ற உத்தி படைத்த புத்தியைச் சொல்லவா?
‘ஆடை முழுதும் நனைய நனைய மழை-யடிக்குதடி’ என்ற பாடலின் இணைப்-பிசையில், அழுகை வாத்தியம் என்று அறியப்பட்ட ஷெனாயில் ஆனந்தத் தாண்டவம் வாசித்த அதிசயத்தைச் சொல்லவா?
உப்புச் சப்பில்லாத படங்களுக்-கும் வஞ்சகமில்லாமல் வாசித்த வள்ளன்மை சொல்லவா?
‘என் பெயரே எனக்கு மறந்து-போன இந்த வனாந்தரத்தில்’ என்ற என் கவிதைக்கு இசையமைத்து இந்தியாவிலேயே புதுக் கவிதைக்கு இசை யமைத்தவர் என்ற புதுமை புரிந்ததைச் சொல்லவா!
வார்த்தைகள் பாடப்படும்போது ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று வாத்தியங்களை ஒதுக்கிவைத்துத் தமிழுக்குத் தலைமை தந்த தகைமை-யைச் சொல்லவா!
பிறப்பு ,இறப்பு ,தாலாட்டு ,ஒப்பாரி , காதல்,பிரிவு, கண்ணீர் ,புன்னகை ,விரக்தி ,நம்பிக்கை, வெற்றி ,தோல்வி
என்று வாழ்வின் சகல உபநதிகளையும் தனக்குள் வாங்கி வைத்துக்கொண்ட சமுத்திர-மல்லவா மெல்லிசை மன்னர்!எல்லாவற்றுக்கும் மேலாய் தன் இசைக்குத் தமிழூட்டிய கவிஞனை மறவாத நன்றியாளர்; இசை நிழல்; தமிழே நிஜம் என்னும் பெருந்தன்மை-யாளர்.
எம்.எஸ்.வி மூன்றெழுத்தில் ஏழுசுரம்.
நூற்றாண்டுகளுக்குப் புகழ்சேர்த்த-வர் நூறாண்டுகள் வாழட்டும் !
Thanks to tfmlover
http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=1794&postdays=0&postorder=asc&start=930 |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|